Saturday, October 1, 2011

சூப்பர் சிங்கரும் என் கண்ணோட்டமும்.


சூப்பர் சிங்கர் விருது கொடுத்தாகிவிட்டது. கொடுத்து முடித்த பிறகு அதன் பற்றிய சர்ச்சைகள் எதற்கு. நான் கூட சாய்சரணுக்கு தான் வாக்களித்தேன். சத்தியபிரகாசும் நன்றாக தான் பாடினார். குரல் வளம் மிக அருமையாக உள்ளது சத்தியபிரகாசுக்கு.

விருது வழங்கி முடித்தபின் அதைப் பற்றிய கருத்துக்கள் வெளியிடுவது தவறு என்று நினைக்கிறேன். அது விருது பெற்றவரின் மனதை பாதிக்கும் அல்லவா.

எண்ணித்துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம்

என்பது இழுக்கு.

நடந்துமுடிந்த விசயங்களைப் பற்றிய கருத்துகள் கூறுவது தவறு என்பது என் எண்ணம்..

ஒவ்வொரு மாதிரி..

என்னுடன் ஒரு பெண் வேலை செய்கிறாள் பெயர் விசாகா(சிற்பல காரணங்களுக்காக மாற்றப்பட்டுள்ளது).. அவள் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு மாதிரி நடந்துகொள்கிறாள்.

மேலதிகாரிகளிடம் மிகுந்த அன்புடனும் பரிவுடனும் கனிவுடனும் நடந்து கொள்கிறாள். மற்றவர்களிடம் அதற்கு எதிராக நடந்து கொள்கிறாள்.

யார் என்ன வந்து கேட்டாலும் எரிந்து விழுவாள். சரியான பதில் அளிக்க மாட்டாள்.

அந்த பெண்ணால் மனவருத்தத்திற்கு ஆளானவர்கள் பலர்.

ஆனால் மேலதிகாரிகளிடம் நற்பெயரும் அதிகமான சம்பள உயர்வுகளும் பெற்றுவருகிறாள்.

சொல்லாத விசயத்தை மேலதிகாரிகள் முன்னிலையில் சொல்லிவிட்டேன் என்பாள். எல்லாவற்றிலும் நான்தான் சரியாக நடந்துகொள்கிறேன் மற்றவர்கள் தான் தவறு செய்வார்கள் என்ற கண்ணோட்டம் அவளுக்கு.

அவர்கள் மனம் வருந்துமே நாம் அவ்வாறு நடந்துகொள்ளக் கூடாதே என்ற உணர்வு இல்லை அவளுக்கு.

வித்யாசமான பெண் விசாகா….