
என் பாட்டி ஒருவர் இருந்தார். இப்போது இல்லை. மிகவும் அன்பானவர். என் அம்மாவின் அம்மாவின் தங்கை அவர். எங்களை வளர்தேதே அவர் தான். அம்மாவின் அம்மா சிறுவயதில் அம்மாவின் சிறுவயதில் இறந்து விட்டார்.
நான் சிறு வயதாக இருந்தபோது உளுந்து வடை கடையில் வாங்கி தரும்படி கேட்டேன்.
சரி என்று கடைக்கு அழைத்து சென்றார்.
அதிக விலை என்று வாங்கி தர மாட்டேன் என்று சொல்லி விட்டார். கடைகரரையும் திட்டி விட்டார்.
அவர் உரில் இருக்கும் பொது நாங்கள் எதாவது வாங்கி கொண்டு போய் கொடுத்தாலும் எங்களுக்கே திரும்ப கொடுத்துவிடுவார் என் பாட்டி.
நாங்கள் கஷ்ட பட்ட காலத்தில் உடனிருந்தவர் நாங்கள் ஓரளவிற்கு நன்றாக இருந்த சமயத்தில் உயிரிடுன் இல்லை.
என் பாட்டிக்கு குழந்தைகள் இல்லை. என் அம்மாவைதான் அவர் வளர்த்தார்.
No comments:
Post a Comment