Sunday, August 14, 2011

பெரியவர்களும் சிறுமைத்தனங்களும்

அந்த ஆபிசில் அப்போதுதான் வேலைக்கு சேர்ந்திருந்தாள் வசுமதி. அந்த ஆபிசில் உயர்அதிகாரி பெயர் பாவனா. தான் என்ற அகங்காரம் அவளுக்கு. கொழுகொழுவென்றிருப்பாள். அவள் எப்போதும் வசுமதியை ஏதாவது ஒன்று கூறிக்கொண்டேயிருப்பாள். வசுமதிக்கு முன் சேர்ந்த நிர்மலாவை புகழ்வாள் வசுமதியை குறைகூறுவாள். எல்லாமே நிர்மலாவிற்குதான் தெரியும் என்பாள்.

அனைத்தையும் தாங்கிக்கொண்ட வசுமதி சுமை தாங்கியானாள்.
நிர்மலா வேலையனைத்தையும் வசுமதியின் தலையில் கட்டினாள்.

நல்ல பெயரையும் அதிக சம்பளத்தையும் அவள் வாங்கிக்கொண்டாள்.

சக பணியாளிணி ஒருத்தி கணினியில் ஒன்று தெரியவில்லை என்று வசுமதியை அழைத்தாள். அங்கே அந்த இடத்தில் கொழு கொழு பாவனா இருந்தாள். வசுமதி அந்த இடத்திற்கு போனவுடன் இவள் வேண்டாம். இவளுக்கு தெரியாது நிர்மலாவைக் கூப்பிடு என்று எல்லார் முன்னிலையிலும் அவமானப்படுத்தினாள்.

செய்த பார்த்த பின்பு தான் தெரியும் தெரியாது என்பதை முடிவு கட்ட வேண்டும். செய்ய விடுவதற்கு முன்னதாகவே தெரியாது என்று சொல்வது எந்த வகையில் நியாயம்.

இவர்கள் எல்லாம் உயர்அதிகாரிகளாம். மெத்த படித்த மேதாவிகளாம் என்னத்த சொல்ல..



No comments:

Post a Comment