அனைத்தையும் தாங்கிக்கொண்ட வசுமதி சுமை தாங்கியானாள்.
நிர்மலா வேலையனைத்தையும் வசுமதியின் தலையில் கட்டினாள்.
நல்ல பெயரையும் அதிக சம்பளத்தையும் அவள் வாங்கிக்கொண்டாள்.
சக பணியாளிணி ஒருத்தி கணினியில் ஒன்று தெரியவில்லை என்று வசுமதியை அழைத்தாள். அங்கே அந்த இடத்தில் கொழு கொழு பாவனா இருந்தாள். வசுமதி அந்த இடத்திற்கு போனவுடன் இவள் வேண்டாம். இவளுக்கு தெரியாது நிர்மலாவைக் கூப்பிடு என்று எல்லார் முன்னிலையிலும் அவமானப்படுத்தினாள்.
செய்த பார்த்த பின்பு தான் தெரியும் தெரியாது என்பதை முடிவு கட்ட வேண்டும். செய்ய விடுவதற்கு முன்னதாகவே தெரியாது என்று சொல்வது எந்த வகையில் நியாயம்.
இவர்கள் எல்லாம் உயர்அதிகாரிகளாம். மெத்த படித்த மேதாவிகளாம் என்னத்த சொல்ல..
No comments:
Post a Comment